பிரதான செய்திகள்

திட்டங்கள் தொடர்பில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கிடையில் முரண்பாடு

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்தில் கெட்டபொல அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கொத்மலை பிராந்திய அபிவிருத்தி குழுவின் தலைவருமான நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyathissa) மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் சாமர சுபாஷித டி சில்வா (Chamara Subhashita DE Silva) இடையே இக்கூட்டத்தின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எழுந்த கருத்து முரண்பாடே மோதலாக மாறியுள்ளது என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

Related posts

முதலைக்கு பலியான பாத்திமா மிஸ்பரா 14வயது சிறுமி

wpengine

சிங்கள பல்கலைக்கழக மாணவர் அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

30வருடத்தின் பின்பு முஸ்லிம் அரசாங்க அதிபர் வவுனியாவில் பதவியேற்பு

wpengine