பிரதான செய்திகள்

திங்கள் கிழமை அமைச்சரவை கூட்டம்! இன்று மாற்றம்.

அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தும் தினத்தில் மாற்றத்தை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதனடிப்படையில், இந்த வாரம் முதல் பிரதி திங்கட்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரச செய்திப் பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் வாரத்தில் திங்கட்கிழமை தோறும் அமைச்சரவையின் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இதனையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுவரை அமைச்சரவைக் கூட்டம் வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு பல கவச வாகனங்கள், பீரங்கிகளை வழங்கிய நேட்டோ!

Editor

ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திர முடிச்சு

wpengine

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனால் மூடப்பட்ட வவுனியா பூங்கா

wpengine