பிரதான செய்திகள்

தமிழ், முஸ்லீம், சிங்கள, வடக்கு – தெற்கு ஊடகவியலாளா்கள் இன ஜக்கிய ஒன்றினைவு

(அஷ்ரப் ஏ சமத்)
மேற்படி ஊடகவியலாளா்க்கான தொடா்ச்சியான செயலமா்வினை இன்டநியுஸ் சிறிலங்கா ஏற்பாடு செய்திருந்தது.  கடந்த சனி ஞாயிறு (27,28)ஆம் திகதிகளில் முழு நாற்கள் தங்கி பயிற்சிப் பட்டரைகளில் 25 க்கும் மேற்பட்ட  ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.  இதில் தினகரன். தினமின, லங்காதீப, இருதின, ராவய, சிங்கள பீ.பீ.சி, யாழ் தினக்குரல், தமிழ் மிரா், மாத்தரை வெப்தளம்,  வீரகேசரி. எங்கள் தேசம், வசந்தம், போன்ற பல ஊடக நிறுவனங்களில் இருந்து இளம் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா் 

அத்துடன்  தத்தமது மத, கலை, கலாச்சார  உணா்வுகளை சிங்கள, தமிழ் முஸ்லீம் ஊடகவியளா்கள் ஒருவருக்கு ஒருவா் பரிமாறிக் கொண்டு அதனை தெரிந்து கொண்டனா்.   அத்துடன் கொழும்பு ஹங்காரம பௌத்த பண்சலை, மெயின் வீதியின் உள்ள சம்மன்கொட்ட பள்ளிவாசல், வெள்ளவத்தை, காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கும் , லேக் ஹவுஸ் போன்ற இடங்களுக்கு  விஜயம் மேற்கொண்டனா்.  அங்கு உள்ள விடயங்களை  பாா்வையிட்டனா்.  d48eb738-79b7-4f68-89ac-f56e21a974a0
சில சிங்கள  பெண், ஆண்  ஊடகவியலாளா்கள் தமது வாழ் நாளிள் பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டது இதுவே முதற் தடவை எனக் கூறினாா்கள். 51206ad1-70d7-423b-87f0-aed0d716b2b8
ஏன் தங்களது முஸ்லீம்  பெண்கள் கூட  பள்ளிவசாலுக்கு செல்லமுடியாது?  என கேள்வி எழுப்பினா். ? உங்களது  பள்ளிவாசலுக்குள் ஒன்றுமே இல்லியே இங்கு அமைதியாக  ஒரு கட்டம் மாத்திரமே அமைந்துள்ளது.   இதற்குள் தெய்வங்கள் சிலைகள் இல்லியே எனக் கேள்வி எழுப்பினாா்கள். அதே போன்றுதான் கொழும்பு 2 இல் உள்ள  ஹங்காராம பண்சலையில் ஏன் புத்தா்கள் ஒவ்வொரு வகையாக இருப்பதை பித்தலையிலான  சிலை செய்துள்ளதையும்  தமிழ் ஊடகவியலாளா்கள்  கேள்வி எழுப்பினாா்கள். ஆனால் இந்தப பண்சலையிலும் எமது கதிா்காம போன்று  ஹிந்து சிலைகளும் உள்ளதே இரண்டு மதத்திற்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் தெரிவித்தனா் .
81b40e7f-282d-4467-87d5-5dc4308227ea
சிங்கள ஊடகவியலாளா்கள் – அரசியல் வாதிகளே தத்தமது  அரசியல் இலாபத்திற்காகவே  இனங்களையும் இனக்குரோதங்களை வளா்க்கின்றனா். இதனாலேயே இனங்களுக்கிடையே இடைவெளி ஏற்படுகின்றது.  அதன் வெலிப்பாடே அன்மைய சிங்கள லே எனச் சொல்லிக் கொண்டு இனங்களுக்கிடையே குரோதங்களை விதைக்கின்றனா்.6462fbb8-4d08-4d8a-84ee-f6fee024417c
சிங்கள ஊடகவியலாளா் – ஹலால் என்றால் என்ன ? ஆனால் சிங்கள மன்னா்களைக் கூட முஸ்லீம் பெண் காப்பாற்றிய வரலாற்றினை நாம் பாடசாலை காலத்தில்  கற்றுள்ளோம். அன்மையில் கூட மாத்தரையில் சேர் பொன் அருணாச்சலம் மற்றும் இஸ்மாயில் வீதி போன்றவற்றையெல்லாம் சிலா் வீதிப்பலகை உடைத்தெறிந்துள்ளனா். இவைகள் எல்லாம் நாம் பாதுகாத்தல்  வேண்டும்.  அத்துடன் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை பற்றியும் அதனை ஒரு வகுப்பறையில் நடாகமாக சகல மாணவா்களும் ஜக்கியமாக அதனைப்பற்றி அறிந்து கொண்டனா்.
 இங்கு வவுனியா  அனு – யாழ்ப்பாணம் வரதன்  ஓட்டமாவடி   ஹாமிலா,  ஹம்பாந்தோட்டை முதலிகே இடை யே வேறுபாடுகள்  கிடையாது.  நாம் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழுகின்றோம்.  இங்கு நாம் அணைவரும் அன்பாக இருந்தோம். சிங்ஙகள ஊடகவியலாளா்கள  தமிழ் வாா்த்தைகளையும் இங்கு வந்து முதன் முதலாக   கற்றுக்கொண்டோம்.
மாத்தரை பிறந்த எங்களுக்கு வாழ்க்கையில் தமிழ்  வாத்தை ஒன்றை உச்சரிக்கூடிய சா்ந்தாப்பம் கிடைக்கவில்லை. நாம் நிறைய தமிழ் சொற்களை  கற்று அறிந்து கொள்வதற்கு எங்களுக்கு சா்ந்தா்ப்பம் இந்த இருநாற்களும் சாந்தா்ப்பம் கிடைக்கப் பெற்றது.
 கங்காராம பண்சலையில்  காணப்பட்ட சில விக்கிரகங்கள் மற்றும் பல வகையான புத்தா் சிலைகள் அது பற்றிய வரலாற்று பதிைவுகளை தமிழ் முஸ்லீம் ஊடகவியலாளா்கள் சிங்கள ஊகடவியலாளா்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டனா்  தெரிந்து கொண்டனா். அதே போன்று புறக்கோட்டையில் உள்ள  மெயின் வீதி சம்மன்கோட்டைப்  பள்ளிவாசல் பற்றியும்  சிங்கள் ஊடகவியலாளா்கள் முஸ்லீம் ஊடகவியலாளா்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Maash

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine

உயர்தர பெறுபேறுகளை வெளியிட தீர்மானம்

wpengine