உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்தநிலையில் இன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய இன்று மாலை 4.00 மணிக்கு முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார் என தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு எதிராக தனி அணி அமைத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

Related posts

முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் புர்கா தடைசெய்யப்படும்!

Editor

மன்னார் சித்திவிநாயகர் பாடசாலையின் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா

wpengine

27 புரட்சியின் ஆரம்பம்! மஹிந்தவின் மேடையில் முன்று அமைச்சர்கள்

wpengine