பிரதான செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு 4நாட்கள்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 4 நாட்களுக்கு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறினார்.

தபால் மூல வாக்களிப்பு நடைமுறை மற்றும் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் எதிர்காலத்தில் வௌியிடப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (10) அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

வவுனியா மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தரை தாக்கிய! திட்டமிடல் பணிப்பாளர்

wpengine

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

wpengine

கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள்-சித்தார்த்தன் (பா.உ)

wpengine