பிரதான செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு 4நாட்கள்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 4 நாட்களுக்கு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறினார்.

தபால் மூல வாக்களிப்பு நடைமுறை மற்றும் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் எதிர்காலத்தில் வௌியிடப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (10) அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

சில பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்து விசேட வர்த்தமானி வௌியீடு!

Editor

பந்துலவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் – வடக்கின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர கோரிக்கை!

Editor

பங்களாதேஷில் தஞ்சமடையும் ரோஹிங்யா முஸ்லிம்! உணவின்றி வாடும் நிலை

wpengine