பிரதான செய்திகள்

தகாத வார்த்தைகளால் மோதிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதப் பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.

பொன்சேகா மற்றும் காமினி லொகுகே வாய்த்தர்க்கம் காரணமாக நேற்றைய தினம்(30) சில மணி நேரங்கள் நாடாளுமன்ற அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.

வரவு செலவுத்திட்டத்தின் கீழ் பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தில் இருவரும் தகாத வார்த்தைகளால், ஒருவரையொருவர் திட்டிக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வார்த்தைகளை ஹன்சாட் பதிவில் இருந்து நீக்கிவிட சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன-அமைச்சர் ரிஷாட்

wpengine

வவுனியா,பட்டாணிச்சூர் பகுதியில் வாகன விபத்து! மூவர் வைத்தியசாலை

wpengine

2000 ரூபா கொடுப்பனவு எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு மரைக்கார் கேள்வி?

wpengine