பிரதான செய்திகள்

டெங்கு மற்றும் கொரோனா தொடர்பில் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் இந்த நாட்களில் டெங்கு மற்றும் கோவிட் பரவி வருவதாக பாணந்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மல்கந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

தொண்டைப்புண், இருமல், சளி ஆகியவற்றுடன் காய்ச்சலும் இருந்தால், அது கோவிட் அறிகுறியாகவும், தசைகளில் கடுமையான வலி, தலைவலி, டெங்கு அறிகுறியாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும், கோவிட் நோயின் போது நோயாளி தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், டெங்கு நோயாளியால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு முன், மருத்துவர் மூலம் நோய் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது கட்டாயமாகும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

6ஆவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி

wpengine

ஹக்கீமும், ரிசாத் பதியு­தீனும் முஸ்லிம்களை பிளவுபடுத்தி விட்டனர் – வட்டரக்க விஜித தேரர்

wpengine

இன, மத, நிற பேதங்களுக்கு அப்பால்ப்பட்டதே வைத்திசாலைகளின் சேவையாகும் அச்சு இயந்திரம் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்

wpengine