பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு! நாளை விடுதலை

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சமூக வலைத்தள இணைப்பாளரான கவிந்த கமகே தனது முகநூல் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

எனினும் ஞானசார தேரரை விடுதலை செய்யும் எந்த தயார் நிலைகளும் இல்லை என ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ஞானசார தேரரை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பும் கூறியுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரரின் பிறந்த தினம் நாளைய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவுக்கு ஆதரவான பிக்குகளின் சத்தியாக்கிரகம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

wpengine

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் லஞ்சம் பெற்ற நபர் கைது

wpengine

பணத்திற்கு விலைபோகும் சிலர் கடந்த தினம் எமது கட்சியில் இருந்து வெளியேற்றம்

wpengine