பிரதான செய்திகள்

ஞானசாரவுக்கு பாதுகாப்பு கொடுப்பது குற்றம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பர் மற்றும் அந்நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்குபவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்பிலான தகவல் தெரிந்தால் பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை

wpengine

5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

அரசாங்கம் ஊடகங்களுக்கு அறிவிக்காமல் பாரிய பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையில்..!

Maash