பிரதான செய்திகள்

ஜிந்தோட்டை பிரச்சினை வாய்மூடி மௌனியான ஜனாதிபதி

ஜிந்தோட்டையில் அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்கள், நாசமாக்கப்பட்டு சில நாட்கள் ஓடிவிட்டன.

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என பலர் ஜிந்தோட்டை சென்று அங்குள்ள முஸ்லிம்களை  சந்தித்திருந்தனர்.

எனினும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமிருந்து, ஜிந்தோட்டை வன்முறை பற்றி எந்தவொரு பிரதிபலிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஜிந்தோட்டைக்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடாவிட்டாலும் பரவாயில்லை.

குறைந்ததபட்சம் வன்முறையை கண்டித்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தாவது ஒரு அறிக்கைதானுமா ஜனாதிபதியினால் வெளியிட முடியாமல் போனது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

Related posts

ரிஷாட் எம்.பி யுடன் இணைந்த சுயேட்சை குழு…

Maash

மாவீரர் குடும்பங்களுக்காக 15மில்லியன் ஒதுக்கீடு! செய்த வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன்

wpengine

தாருல்­ஸலாம் தொடர்­பான ஊழல்கள்! அக விளக்­கங்­களை வழங்­க­வில்லை -பஷீர் சேகு­தாவூத்

wpengine