பிரதான செய்திகள்

சாக்கடை அரசியலுக்காக குடும்ப உறவுகளை பிரிக்கும் அமைச்சர் ஹக்கீம்

அபு ரஷாத் (அக்கரைப்பற்று)

அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும்  எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ இல்லையோ நாம் சில விடயங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.

 

நிந்தவூரிலே அமைச்சர் ஹக்கீம் விழா நடாத்துவதொன்றும் புதிதான விடயமல்ல.ஜப்பார் அலி என்பவர் நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளானுமல்ல.அவருக்கு இது வரை எந் நிகழ்வுகளில் முக்கிய கதா பாத்திரம் வழங்கப்பட்டதில்லை.எப்போதும் கூட்டங்களில் நாலோடு ஐந்தாகவே இருப்பார்.

 

ஆனால்,இன்று நிந்தவூரிலே நடாந்த நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜப்பார் அலி தலைமையில் இடம்பெற்றுள்ளது.இதற்கு முன்பும் அவர் கட்சியில் இருந்தார் தானே! அவர் அஷ்ரப் காலத்து மூத்த போராளியும் கூட.ஏன் அவருக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை? நிந்தவூரில் பிரதி அமைச்சர் பைசால் காசிம்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அரசியல் அதிகாரங்களோடு இருக்கும் போது ஜப்பார் அலி தலைமையில் இக் கூட்டத்தை நடாத்த காரணம் என்ன? ஜப்பார் அலியை  உருவேற்றினால் தானே ஆட வைக்கலாம்.

 

அமைச்சர் ஹக்கீம் சகோதர் இருவருக்குமிடையில் பிரச்சினையை மூட்டிவிட்டு தனது விடயத்தை சாதிக்க முனைகிறார்.இதனை ஜப்பார் அலி புரிந்து கொள்ள வேண்டும்.இங்கு சகோதர உணர்வை அமைச்சர் ஹக்கீம் அரசியலுக்கு பயன்படுத்த சிந்திக்கின்றார்.ஜப்பார் அலிக்கு நிந்தவூர் தவிசாளர் ஆசை அல்லது மாகாண சபை வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம்.தனது சகோதரனுக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கி ஏமாற்றியது போன்று அவரும் ஏமாற்றப்படலாம்.இதில் பிளவு படப்போவது ஒரு குடும்பம்.தூய்மையான அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழக்கலாம்.இச் சாக்கடை அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழப்பதா? என்பதை ஜப்பார் அலி அவர்களே!ஒரு கனம் நிதானமாக சிந்தியுங்கள்.

Related posts

பொதுநலவாய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

wpengine

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine

ரணில் அரசின் திட்டத்தை கோத்தா அரசு இடநிறுத்தம்

wpengine