பிரதான செய்திகள்

ஜப்பான் நாட்டிலும் மஹிந்த ஆசி வேண்டினார்

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சவரா லங்கா ஜி விகாரையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜப்பானிலுள்ள இலங்கையர்களின் அழைப்பினை ஏற்று 6 நாட்கள் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன் தினம் ஜப்பானுக்குச் சென்றனர்.

ஜப்பானின் பிரதான சங்க நாயக்கர் பானகல உபதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ஸ, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்த்தன, ஜானக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, ரோஷான் ரணசிங்க, தெஹிவளை – கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட குழுவினர் முன்னாள் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வங்குரோத்துவாதிகள் றிஷாட்டை பழி தீர்க்க அரசியல்வாதிகளின் முகவர் குவைதீர்கான்

wpengine

விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யவேண்டும் -பொதுபல சேனா மகஜர்

wpengine

நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள மன்னாருக்கு சென்றேன் முன்னால் அமைச்சர் ரவி

wpengine