பிரதான செய்திகள்

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் நாடுபூராகவும் தொடரும் போராட்டம்!!!

உலக சுகாதார இஸ்தாபனத்தின் (WHO) நடைமுறைகளை கொரோனா விடயத்தில் பின்பற்றும் அரசு இந்த ஜனாஸா எரிப்பு விடயத்தில் மாத்திரம் மாற்றமாக செயற்படுகிறது.

இதற்கு முன் இருந்த எந்த அரசும் இப்படியான வேதனையான எந்த செயலையும் எமது சமூகத்திற்கு செய்யவில்லை.
இந்த அரசு இந்த இனச்செயலை உடன் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் இன்று இந்த பொரளை கனத்தையில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போல் நாடுபூராகவும் நடத்துவோம்.

அதேபோல் ஜனாஸா எரிப்பு எதிராக உலக நாடுகளில் வாழும் இலங்கை உறவுகளும் குரல்கொடுத்துவருகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து இந்த அரசு சரியான நிபுணர்குழுவை நியமித்து ஆய்வு செய்து ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இன்று கனத்தைக்கு முன்னாள் இடம்பெற்ற ஜனாஸா எரிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான #ரிஷாட் #பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும், எதிர்க்கட்சியினரும் கலந்துகொண்டனர்.

Related posts

இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் ஒரு மைல் கல் அமைச்சர் றிஷாட்

wpengine

அரிசிக்கான சில்லறை விலை மாற்றம்! அமைச்சர் றிஷாட் உடனடி நடடிக்கை

wpengine

வட மாகாணத்தில் 23பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

wpengine