பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதிக்கிறங்குவோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. அந்த ஊழல் மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் மோசடிகளுக்கு இடமளிக்கமாட்டோம் எனவும் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் பிரவேசிக்க இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரல்.

wpengine

உள்ளூராட்சி தேர்தலில் சேர்ந்தும், தனித்தும் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியம் முடிவு .

Maash

குடி நீர் பிரச்சினையினை தீர்த்து வைக்க எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உதவி

wpengine