அரசியல் பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி, இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி அனுப்பப்படவில்லை என்றும், இது முந்தைய ஆட்சிகள் பின்பற்றிய ஒரு நடைமுறை என்றும் கூறினார்.
ஜனாதிபதியின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மிச்சப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்த ஆண்டு ஜனாதிபதியின் செய்தி அனுப்பப்படாததால் நாடோ, அல்ல கட்சி உறுப்பினர்கலுக்கோ எந்த பிரச்சினையும் எட்டப்படவில்லை. இருப்பினும் இந்த நடவடிக்கையால் ஒரு பெரிய தொகை சேமிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும், இந்த குறுஞ்செய்தி செய்திக்காக ரூ. 98 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் குறுஞ்செய்தி செய்தியை அரசாங்கம் இரத்து செய்துள்ளது, இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமே வெற்றி.
புத்தாண்டு செய்திகளை அனுப்புவதற்காக ஒரு ஜனாதிபதி நியமிக்கப்படுவதில்லை, சாதாரண குடிமகனின் முன்னேற்றத்திற்காக பணத்தை ஒதுக்குவதை நிரூபித்துள்ளதால், நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல சரியான தலைவர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.