பிரதான செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை

அமைச்சரவை கூட்டம் இன்று (12) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை ரயில் பயணிகளுக்கு நட்பு ரீதியான பயண சீட்டுக்களை அறிமுகப்படுத்தல் மற்றும் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளல் போன்ற சேவைகளை ஒன் லைன் மூலம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில் பயணங்களுக்கான ஆசனங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதில் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டே குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்!

Editor

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Editor