அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் துபாய் பயணமானார் .

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவையின் E. K – 651 விமானத்தின் மூலம் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி செய்யுங்கள்

wpengine

இலங்கை , இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் !

Maash

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும்-சிறீதரன்

wpengine