பிரதான செய்திகள்

சொந்த நிதியில் தெருவிளக்குகளை பெற்றுக்கொடுத்த கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்

(ஊடகப்பிரிவு)
கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஊரின் முக்கியஸ்த்தகர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் அவர்களுடனான சந்திப்பு ஆஷிக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தச்சந்திப்பின் போது கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வகிகள் மற்றும் ஊரின் முக்கியஸ்த்தர்களினால்  “தங்கள் ஊரின் பல இடங்களில் தெருவிளக்குப்பற்றாக்குறை நிகழ்கின்றது, இதனால் தொழுகைக்காக வரும் பெண்கள்,சிறுவர்கள் அச்சத்துடனே பயணிக்கும் நிலைக்காணப்படுகின்றது”  எனவே இப்பிரச்சினை தீர்க்கும் வகையில் தெருவிளக்குகளைப்பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட மனு ஒன்று ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது ஆஷிக் அவர்கள் நாளைய தினமே தெருவிளக்குகளை சொந்த நிதியில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார்.

Related posts

அகதிகள் படும் கஷ்டங்களை தீர்த்து வைப்பது தொடர்பில் யாப்பா – அமைச்சர் றிசாத் பேச்சு

wpengine

சமூக ஊடகம் ஊடாக பெண்களுக்கு பாதிப்பு அரசு நடவடிக்கை

wpengine

மன்னார் தீவு பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்.!

Maash