இன்று உலகில், சே-குவேரா, மண்டேலா, கஸ்ட்ரோ ஆகியோர் இருந்திருந்தால் ஈரானுக்கு ஏதோ முறையில் துணை நின்று இருப்பர் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஈரான் தனித்து போராடுது. நன்கு யோசித்து பார்த்தால் இது புரியும்…
இது புரியாத பொது வெளி சாமான்கள் (PVS) இங்கே உரையாட வர வேண்டாம். ப்ளீஸ்!
ஈரானின் சகோதரர், உறவினர், தூரத்து உறவினர், நண்பர் என்ற கும்பலில் எவருமே முழு மனசுடன் ஈரானுக்கு உதவ முன் வரவில்லை.
இரகசிய துரோகிகளும், போட்டு கொடுப்போரும், சும்மா வாய் பந்தல் போடுவோரும் தான், இந்த கும்பலில்.
ஈரான் தன் தேச மனசாட்சிக்கு எது நியாயமாக படுதோ அதற்காக தனித்தே போராடுது.
ஆனால், ஈரானின் போர், ஈரானுக்கான போர் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மத்திய கிழக்குக்கான போர்.
இன்று உலகில், சே-குவேரா, மண்டேலா, கஸ்ட்ரோ ஆகியோர் இருந்திருந்தால் ஈரானுக்கு ஏதோ முறையில் துணை நின்று இருப்பர்.
மத்திய கிழக்கின் மைய பிரச்சினை பலஸ்தீனம்தான். உலகம் ஏற்று கொண்டுள்ள குறைந்த பட்ச பலஸ்தீன்-இஸ்ரேல் என்ற இரு தேச தீர்வைகூட ஏற்க இஸ்ரேல் மறுக்குது. இதனால் தான் யுத்தம்.
அடுத்த விவகாரம். அணு ஆயுத பலம். இது தம்மிடம் மட்டுமே இருக்கனும் என மருமகன் இஸ்ரேல், மாமா யூஎஸ், இருவரும் நினைக்கிறாங்க.
மெய்யாலும், இந்த யுத்தம் நின்று நிலையான சமாதானம் வரனும் என்றால், ஆயுத பலம் ஒரு தரப்பிடம் மட்டும் இல்லாமல் இரு தரப்பிடமும் இருக்கனும்.
அதான், Balance of Power என்று உலக புவிசார் அரசியலில் சொல்ல படுது.
வல்லரசுகள் மத்தியில் நேரடி போர், அமெரிக்கா-ரஷ்யா, இந்தியா-சீனா நேரடி போர் நிகழா-திருக்க இதுவே நடைமுறை காரணம்.
ஈரானிடமும் அணு ஆயுதம் இருந்தால், இன்று பலஸ்தீனத்தில் 50,000 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்ல பட்டிருக்க மாட்டாங்க.
இது மத்திய கிழக்கில், அரபு நாடுகளுக்கு விளங்கலை. அரபு அல்லாத பாரசீக ஈரானுக்கு மட்டும் விளங்குவது, சோகம் தான்.
ஆனாலும், இனியும் பேட்டை ரவுடி மாதிரி வாழ முடியாது, தன் நாட்டு மக்களின் பாதுகாப்பையே உறுதி செய்ய முடியாது என இஸ்ரேலுக்கு மெல்ல, மெல்ல புரியுது. ஆகவே, மத்திய கிழக்கு இன்று தீர்வை நோக்கி நகருது, என பட்சி சொல்லுது!