பிரதான செய்திகள்

சுற்றுலாத்துறை மாநாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு அழைப்பு

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 27,28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின்’ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27 ஆம் திகதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதயாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளவுள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விசேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்கான அழைப்பிதழ் ‘ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின்’ உப ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரபாத். சீ. உக்குவத்த மற்றும் அதன் ஊடக – சர்வதேச உறவுகளுக்கான இயக்குனர் நிஸாயீர் ஆகியோர் அமைச்சரிடம் வழங்கி வைப்பதையும் அருகில்; மட்டக்களப்பு பல்கலைகழகத்தின்  நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் இருப்பதையும் படத்தில் காணலாம்.

Related posts

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு

wpengine

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை! அமைச்சர் றிஷாட் நேர்மையாக செயற்படுகின்றார் ஹரீஸ் தெரிவிப்பு

wpengine

வர்த்தமானி அறிவித்தல் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்! நாங்களும் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும்-அமீர் அலி

wpengine