தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை உதவி அத்தியசகர் தலைமையில் குறித்த கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படும் ஒரு அங்கமாக வவுனியாவிலும் சிறு குற்றங்களில் ஈடுபட்ட இரு கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.