பிரதான செய்திகள்

சிறுவர்கள் விபத்துக்களால், திடீர் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திடீர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்திய நிபுணர் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் ருவந்தி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள தரவுகளை ஆய்வு செய்யும்போது, திடீர் விபத்துகளால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

பெரும்பாலான விபத்துகள் அறியாமை மற்றும் சோதனை செய்யும் முயற்சிகளினால் ஏற்படுகின்றன.

இந்த திடீர் விபத்துகள் பல வடிவங்களில் இடம்பெறுகின்றன.

2 முதல் 3 வயதுக்கிடையிலான சிறுவர்கள் அறியாமையால் ஏற்படும் விபத்துக்குள்ளாகுகின்றனர்.

12 முதல் 14 வயதுக்கிடையிலான சிறுவர்கள் பல்வேறு சோதனை முயற்சிகளால் விபத்துக்குள்ளாகுகின்றனர்.

கீழே தவறி விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஏற்படல் ஆகியவை சிறுவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் விபத்துகளாகும்.

விபத்துகளை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் பேராசிரியர் ருவந்தி பெரேரா வலியுறுத்தினார்.

Related posts

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை.நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன்.

wpengine

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்ககூடாது! வவுனியாவில் கண்டனம்

wpengine

தலைமன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு! மக்கள் அசௌகரியம்

wpengine