பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிறுவர்கள் கவனம்! வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல்

வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா்.

 

குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம்  ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதனால் மக்கள் அவதானமாக இருக்கும்படி சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அரச ஊழியர்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

wpengine

அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

wpengine

13தான் இறுதித் தீர்வோ?

wpengine