செய்திகள்பிரதான செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் எம்.பி முறைப்பாடு!

ஊடகப்பிரிவு- 

“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல்.மப்றூக் மீதான தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரான கடுமையான செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் யூ.எல்.மப்றூக் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

மேற்படி தாக்குதல் சம்பவம் ஊடகத் துறைக்கு பெரும் சவாலாகும். ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இதுபோன்ற வன்முறையை அனுமதிக்க முடியாது.

யூ.எல்.மப்றூக் போன்ற நேர்மையான மற்றும் நடுநிலை செய்தியாளர்களை குறிவைக்கும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அரசியல் வாங்குரோத்தின் வெளிப்பாடாகும். வன்முறை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு, கடந்த காலத்தில் மக்கள் தக்கபாடம் கற்றுக்கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ள அவர், இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

Editor

நான் கட்சி மாறவில்லை! எதிர்கால அரசியல் பற்றி பேசினேன் – முன்னாள் தவிசாளர்

wpengine

சிலாவத்துறை வீட்டுத்திட்ட அழைப்பிதழ் வட மாகாண சபை உறுப்பினர்,முசலி பிரதேச உறுப்பினர்கள் பெயர் நீக்கம்

wpengine