பிரதான செய்திகள்

சாரதி அனுமதி பத்திரம்! புதிய நடைமுறை

அடுத்தாண்டு முதல் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சாரதி அனுமதி பத்திரம் கோரும் நபர்கள் ஒருநாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவதை கட்டாயமாக்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

நாளுக்கு நாள் இடம்பெறுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் பாதசாரிகள் என தெரியவந்துள்ளது. அவர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டில் அதிகமான மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் ஏற்பட்டுள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1145 ஆகும். அதனை கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 22 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சுக்கான நிதியினை செலவு செய்யாத அமைச்சர்கள்

wpengine

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் “ஔிபரப்பு அதிகார சபை” விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை!

Editor

இப்தார் சிந்தனைக்குள் அலைக்கழியும் முஸ்லிம் தேசியம்!

wpengine