செய்திகள்பிரதான செய்திகள்

சாமர சம்பத் கைதின் கருத்துக்கு கிடைத்த பலன் இந்த சம்மன்- ரணில் விக்ரமசிங்க.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஊழல் ஆணைக்குழுவின் சம்மன் – விசேட அறிக்கை வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக சம்மனிக்கப்பட வேண்டிய நிலையில், இதன் தொடர்பாக ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இச்சம்மன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் விடுக்கப்பட்டதாகவும், அப்போது தாம் மற்றும் தமது சட்டத்தரணி குழுவும் கொழும்பில் இல்லையென்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாக புதிய திகதியொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டதையடுத்து தாம் வெளியிட்ட பொது கருத்துக்கு பிந்தைய மிக விரைவு நடவடிக்கையாக இந்த சம்மன் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த கருத்து ஏப்ரல் 10 ஆம் திகதி மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, குறைந்தது 18 மணி நேரத்திற்குள் – அதாவது மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் – சம்மன் கடிதம் தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

இது, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் சுமார் மூன்று பணி நேரங்களுக்குள் நடவடிக்கை எடுத்துள்ளதாக காட்டுவதாகவும், அந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு வழக்குப் பதிவு தயாரிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை ஏற்கெனவே இவ்வாறு எப்போதும் மேற்கொள்ளப்படாத ஒரு அபூர்வ நடவடிக்கையாக இருப்பதாகவும், ஆணைக்குழு இதற்கு முன்னர் இதுபோல் செயற்பட்டதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Related posts

எரிபொருள் தொடர்பான பிரச்சினை திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்

wpengine

கடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் அடைக்கலம்

wpengine

ரணில் தலைமையில் ஜனநாயகம், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் முடியாது

wpengine