உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சாண்டோ டொமிங்கோவில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் பலி..!

டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர்
உயிரிழந்துள்ளதுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாகாண ஆளுநரும் முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரருமான ஆக்டேவியோ டோட்டலும் பலியானவர்களில் அடங்குவர். 51 வயதான டோட்டல், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பிரபல மெரெங்கு பாடகர் ரூபி பெரெஸின் ஜெட் செட் இரவு விடுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்தது.

நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்திற்குள் இருந்தனர், மேலும் சுமார் 400 மீட்புப் பணியாளர்கள் இன்னும் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் உள்ளது.

அவசரகால செயல்பாட்டு மையத்தின் (COE) இயக்குனர் ஜுவான் மானுவல் மென்டெஸ், இடிந்து விழுந்த கூரையின் கீழ் சிக்கியுள்ளவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாகக் கூறினார்.

ஜெட் செட் என்பது சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியாகும், இது திங்கட்கிழமை மாலைகளில் வழக்கமாக நடன இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மான்டே கிறிஸ்டி மாகாண ஆளுநர் நெல்சி குரூஸும் ஒருவர் என்று ஜனாதிபதி லூயிஸ் அபினாடர் கூறினார்.

இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இத்தாலி நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்!

wpengine

குழந்தையை கொலை செய்து விட்டு கணவனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய மனைவி

wpengine

பதினெட்டே மாதங்களில் 31 கிலோ; அரிய நோயால் பாதிக்கப்பட்ட ‘யாகிஸ்’

wpengine