பிரதான செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் புத்தளத்தில்  உரையாற்றியதாக கூறப்படும் மதராஸா பாடசாலையில் பணியாற்றிய இருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் இந்த மதராஸா பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த மாணவர்களிடையே உரையாற்றியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, 
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26,27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

பாலஸ்தீனத்தில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை – இஸ்ரேலிய காவல்துறை

wpengine

களுத்துறை மாநகர சபை மேயர் அமீர் கைது

wpengine

இயலும் என்றால் என்னை கைதுசெய்து பாருங்கள் பூஜிதவுக்கு ஞானசார தேரர் சவால்

wpengine