Breaking
Thu. Apr 25th, 2024

சவூதி அரே­பிய அரசு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ரமழான் அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யுள்ள 200 தொன்  பேரீச்சம் பழமும்  எதிர்­வரும் ரமழான்  மாதத்­துக்கு முன்பு நாடெங்­கிலும்  உள்ள  பதிவு செய்­யப்­பட்­டுள்ள  பள்­ளி­வா­சல்கள் ஊடாக மக்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என முஸ்லிம் சமய மற்றும் தபால்  சேவைகள் அமைச்சர்  எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.
இதற்­கான  சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முஸ்லிம்  சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் மேற்­கொள்ளும்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு திணைக்­களம் பேரீச்சம் பழங்­களை அனுப்பி வைக்க ஏற்­பா­டு­களைச் செய்யும். விரும்பும்  நிர்­வா­கங்கள் நேரில் வந்தும்  பெற்றுக் கொள்ள முடி­யு­மெ­னவும் அமைச்சர் கூறினார்.

நேற்­றுக்­காலை முஸ்லிம் சமய மற்றும் தபால் சேவைகள் அமைச்சின்  காரி­யா­ல­யத்தில்  சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­களால்  பேரீச்­சம்­பழம் முஸ்லிம் சமய மற்றும் தபால் சேவைகள் அமைச்சர்  எம்.எச்.ஏ.ஹலீ­மிடம்  கைய­ளிக்­கப்­பட்­டது.

இலங்­கை­யி­லுள்ள  சவூதி  அரே­பியா தூது­வ­ரா­ல­யத்தின்  இரண்­டா­வது அதி­காரி  (charge de affairs) மொஹமட் அல்லாப் பேரீச்சம் பழத் தொகையை  அமைச்சர் ஹலீ­மிடம் கைய­ளித்தார்.

இந்த பேரீச்­சம்­ப­ழத்­தொ­கையை ஆவ­ணங்­களில்  கையொப்­ப­மிட்டு  அமைச்சர் பெற்­றுக்­கொண்டார். இந்­நி­கழ்­வி­னை­ய­டுத்து  ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அமைச்சர் ஹலீம்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்தும் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்,  கடந்த வருடம் சவூதி அரே­பியா அரசு இலங்­கைக்கு  250 தொன் பேரீச்­சம்­பழம் அன்­ப­ளிப்புச் செய்­தி­ருந்­தது. இவ்­வ­ருடம் 200 தொன்னே வழங்­கப்­பட்­டுள்­ளது. இத்­தொகை உட­ன­டி­யாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­படும்.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு ஈரான், கட்டார் மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய நாடு­க­ளி­டமும் தூது­வ­ரா­ல­யங்­க­ளூ­டாக  பேரீச்­சம்­பழம் கோரி­யுள்­ளது.  இந்­நா­டு­களும்  ரமழான் மாதத்­துக்கு முன்பு  பேரீச்­சம்­பழம் அன்­ப­ளிப்புச் செய்தால் இலங்கை முஸ்­லிம்­களின் ரமழான் மாத   தேவையைப் பூர்த்தி செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

சவூதி அரே­பி­யா­வுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் நீண்­ட­கா­ல­மாக உறவு இருந்து வரு­கி­றது. ரமழான் காலத்தில் சவூதி அரே­பியா பேரீச்­சம்­பழம் அன்­ப­ளிப்புச் செய்­து­வ­ருவதுடன் மேலும் பல அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கும்  உதவி வரு­கி­றது.

நாம் சவூதி  அரே­பிய அர­சாங்­கத்­துக்கும் சவூதி மக்­க­ளுக்கும் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம் என்றார்.

மன்னர் சல்­மானின் நலன்­புரி  அமைப்பின் பிர­தி­நிதி ஹமட் அல்­பஸ்லி தன­து­ரையில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு  பேரீச்சம் பழம் அன்­ப­ளிப்பு செய்­வதில் தாம் பெரும் மகிழ்­வெய்­வ­தா­கவும், எமது உற­வுகள் மேலும் பல­ம­டை­வ­தா­கவும்  தெரி­வித்தார்.

நிகழ்வில் சவூதி அரசின்  நிதி­ய­மைச்சின் பிர­தி­நி­திகள் அப்துல் அஸீஸ் அல்­திரீஸ் அப்துல் மலிக்  அல்­ஹசன் ஆகி­யோரும் மன்னர்  சல்மான் நலன்­புரி அமைப்பின் சார்பில் ஹமட் அல்­பஸ்லி, மொபரெஹ் அல்­கம்­தியும் கலந்து கொண்­டனர்.

மேலும் முஸ்லிம் சமய தபால் சேவைகள் பிர­தி­ய­மைச்சர்  துலீப்  விஜே­சே­கர, முஸ்லிம்  சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.எச். எம்.ஸமீல், அமைச்சின் செய­லாளர், அமைச்­சரின் பிரத்­தி­யோக  செய­லாளர் எம்.எச்.எம்.பாஹிம், வக்பு சபைத்தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன், உறுப்பினர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *