பிரதான செய்திகள்

சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து

வவுனியாவில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்று கொண்டுள்ளது. பின்னால் வந்த டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துடன் மோதியுள்ளது.

 

இதனால் பேருந்தில் பயணம் செய்த நடேசபிள்ளை கமலாகரன் வயது 36 கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நபரும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் வயது 38 வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்.

 

 

 

 

Related posts

தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள் ! தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளடங்கலாக , வர்த்தமானி வெளியானது . !

Maash

மருந்து தட்டுப்பாட்டை நீக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

Editor

நீதிமன்றால் தேடப்படும் உதயங்க ஜப்பானில் வைத்து பிரதியமைச்சருடன் செல்பி

wpengine