பிரதான செய்திகள்

சர்வதேச ரீதியில் கடன் பிரச்சினை தீர்க்க! பிரதமர் பதவிக்கு ரணில்,பசில் பிரேரினை

2022 அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இதில் எந்தவித அடிப்படையும் இல்லை.  இது உண்மைக்கு புறம்பான கூற்று என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், பிரதமர் பதவிக்காக, பெசில் ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. அதில், சர்வதேச ரீதியில் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே, அவரது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என்றார்

Related posts

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்புறக்கணிப்பு

wpengine

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

Maash

காதீ நீதி மன்றத்தை அவமதித்தவருக்கு நீதி மன்ற பிடியானை

wpengine