சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், இன்று திங்கட்கிழமை (30) உத்தியோகபூர்வமாக தனது தவிசாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், மௌலவி ஆஷாத்தின் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் முன்னிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
