பிரதான செய்திகள்

சமுர்த்தி வங்கியினை நான் விடமாட்டேன்! கொள்ளையடித்தவர்களின் கையில் சிக்கினால்

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணை விவகாரம் காரணமாக சமுர்த்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவியில் இருந்து கடந்த மாதம் எஸ்.பி. திசாநாயக்க பதவி விலகியிருந்தார்.

கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சமூக வலுவூட்டல் அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் தயா கமகேவிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், சமுர்த்தியும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் தனியானதொரு வங்கியாக அதனை செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேதின உரையில் தெரிவித்திருந்தார்.

எனினும் எக்காரணம் கொண்டும் அதனை செயற்படுத்த விடப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.

சமுர்த்தி வங்கியில் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வைப்புப் பணம் உள்ளது.

இந்நிலையில், மத்திய வங்கியை பட்டப் பகலில் கொள்ளையடித்தவர்களின் கையில் சிக்கினால் சமுர்த்தி வங்கியின் கதி அதோ கதிதான் என்றும் எஸ். பி. திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்

Maash

சுதந்திரக் கட்சிக்கு ஏழு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்! இரண்டு முஸ்லிம்கள்

wpengine

சீனா நாட்டில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக கிழக்கிலிருந்து ஒரேயொரு முஸ்லிம் அதிபர் சீனா நோக்கி பயணமானார்.

wpengine