பிரதான செய்திகள்

சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் மண்ணை தோண்டும் விஷேட பிரிவு

வவுனியா – பாரதிபுரத்தில் வீட்டுக்காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று நேேேற்று  காலை பத்து மணியளவில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், குறித்த வீட்டு காணியிலிருந்து எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோண்டும் பணி நடைபெற்ற போது அப்பகுதியைச் சுற்றி
விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, கிராம சேவையாளர் முன்னிலையில் வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வாளர்கள் ஆகியோரால் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தோண்டப்பட்ட பகுதியில் தகர கொள்கலன் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்

wpengine

அதி­காரப் பகிர்வு முஸ்லிம் சமூ­கத்தின் மீது எழு­தப்­படப் போகின்ற அடிமைச் சாசனம்! புரிந்துகொள்ள முடியாத தலைமைகள்

wpengine

தரங்க, டிக்வெல்ல அதிரடி : ஆஸியை வீழ்த்தியது இலங்கை

wpengine