பிரதான செய்திகள்

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது.

குறித்த நெற்களை சந்தைக்கு வழங்கும் வரையிலான நடிவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த சபையின் தலைவர் எம். பீ. திசாநாயக்க கூறினார்.

இது தவிர இலங்கை சதொசவிற்கு 20,000 மெட்ரிக் தொன் நெல் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் தினங்களில் மேலும் 35,000 மெட்ரிக் தொன் நெற்களை சதொசவிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எம். பீ. திசாநாயக்க மேலும் கூறினார்.

Related posts

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சம்பந்தனுக்கு விருது

wpengine

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Editor

வாழ்வாதார உதவி திட்டத்தில் இலாபம் உழைக்கும் அதிகாரிகள்! முசலி மக்கள் விசனம்

wpengine