பிரதான செய்திகள்

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது.

குறித்த நெற்களை சந்தைக்கு வழங்கும் வரையிலான நடிவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த சபையின் தலைவர் எம். பீ. திசாநாயக்க கூறினார்.

இது தவிர இலங்கை சதொசவிற்கு 20,000 மெட்ரிக் தொன் நெல் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் தினங்களில் மேலும் 35,000 மெட்ரிக் தொன் நெற்களை சதொசவிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எம். பீ. திசாநாயக்க மேலும் கூறினார்.

Related posts

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய மணல் கொள்ளை

wpengine

சாதாரண பிள்ளையானுக்கு எங்கிருந்து வந்தது? வேறு ஒருவரின் வீட்டில் வாழும் பிள்ளையான்

wpengine

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

Editor