Breaking
Tue. Apr 16th, 2024

மஹிந்த ராஜபக் ஷ தனது உற­வு­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­கா­கவே மக்கள் மத்­தியில் தோன்­று­கி­றாரே தவிர அர­சாங்­க­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அல்ல எனத் தெரி­வித்­துள்ள சுகா­தார மற்றும் தேசிய வைத்­தி­யத்­துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன, ஜெனீவா செல்லும் பொது எதி­ர­ணி­யினர் தொடர்­பிலும் நல்­லாட்சி தொடர்­பா­கவும் ஜெனீவா அதி­கா­ரி­க­ளுக்கு நன்கு தெரியும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

 

கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்ற சுகா­தா­ரத்­ து­றைக்கான தலை­மைத்­துவப் பயிற்­சியை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் இங்கு மேலும் உரை­யாற்றும் போது,

ஜன­நா­ய­கத்தை பற்றி நன்­றாகத் தெரிந்­த­வர்கள் எவரும் பொது எதிர்க்­கட்­சியின் கதை­க­ளுக்கு ஏமாறமாட்­டார்கள்.

தமிழ், சிங்­கள புது­வ­ரு­டத்­திற்கு முன்­ப­தாக அர­சாங்­கத்தை கவிழ்ப்போம் என பொது எதி­ர­ணி­யினர் கூறு­கின்­றனர். ஆனால் இவர்­களால் அரசை கவிழ்க்க முடி­யாது. ஏனென்றால் அவர்­க­ளுக்கு வேலைத்­ திட்டம் எதுவும் கிடை­ யாது.

மஹிந்த ராஜபக் ஷ தமது குடும்­பத்தி­ ன­ருக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­கா­கவே மக்கள் மத்­தியில் தோன்­று­கி­றாரே தவிர அர­சாங்கம் ஒன்று அமைப்­ப­தற்­காக அல்ல. நாட்டின் பாது­காப்­பிற்கு எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­தலும் ஏற்­ப­ட­வில்லை.

2014ஆம் ஆண்டு தொடக்கம் இவ்­வா­றான தற்­கொலை அங்­கிகள், ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன. கடந்த காலங்­களில் விடு­த­லைப்­பு­லி­களால் பதுக்கி வைக்­கப்­பட்­ட­வை­களே இவ்­வாறு வெளி­வ­ரு­கின்­றன. இதில் ஆபத்­தெ­தையும் நான் காண­வில்லை.

ஜெனிவாவில் உள்ளோர் பொது எதிர்க் ­கட்­சி­யினர் தொடர்­பாக நன்­கறி­வார்கள் அதேபோன்று நல்லாட்சி தொடர்பாகவும் நன்கறிவார்கள்.

எனவே, ஜனநாயகம் என்பது என்ன வென்று தெரிந்த வர்களை பொது எதிர்க்கட்சியினரால் ஏமாற்ற முடியாது என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனா ரத்ன தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *