பிரதான செய்திகள்

சட்டவிரோத மணல் கொள்ளை! 125000ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 125000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி பொலிஸர் கைது செய்துள்ளனர்.

குறித்த டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலைபடுத்திய நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ், ஏழு நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கத்துக்குட்டி அஸ்மின்யின் கருத்து வடக்கு முஸ்லிம்களை வேதனையடையச் செய்கின்றது -மௌலவி பி.ஏ.சுபியான்

wpengine

தாக்குதல் இன்று ஆட்டம் காணும் ரணில் அரசு

wpengine

20ல் வடக்கு,கிழக்கில் வாழும் சிறுபான்மைக்கு பாதிப்பு YLS ஹமீட்

wpengine