பிரதான செய்திகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில், சற்றுமுன்னர்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்ஜித் மத்தும பண்டார, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக பதவிவகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தொடர்பில் அண்மைய காலமாக நீடித்த பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த அமைச்சை தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.

Related posts

அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரிப்பதட்கு திட்டமிடுகின்றது .

Maash

மின்னல் ரங்காவுடன் சேர்ந்து ”வளர்த்த கடா மார்பில் மீண்டும் பாய்கின்றது.

wpengine

மன்னார்,முசலி பிரதேச நிலமெவகர! அமைச்சர் பங்கேற்பு (படங்கள்)

wpengine