அரசியல்

கோட்டாபய ராஜபக்சவை ரணில் காப்பாற்றினாரா ? இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் .

அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார்.

அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

பெரும் உயிரிழப்புகளை  ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க  விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்ற கேள்விக்கு எனது நாட்டில் அரசியல்தொடர்பற்றவரான சட்டமாஅதிபரே வழக்குதாக்கல் செய்வது குறித்து தீர்மானிப்பார் எங்களால் அவருக்கு ஆதாரங்களை அனுப்பமுடியும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

அநுரவுக்கும் டிரான் அலஸுக்கும் இடையிலான டீல் ! இதுவே தேசபந்து கைது செய்யப்படவில்லை .

Maash

NPP ஆட்சியமைக்கும் சபைகளுக்கு கண்ணை மூடி நிதி, ஆட்சியமைக்கும் வேறு கட்சி சபைகளுக்கு 10 முறை சரிபார்க்கப்படும் .

Maash

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர்ளுக்குள் மறைந்திருக்கும் JVP – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Maash