பிரதான செய்திகள்

கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் இப்தார் நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் உள்ள முஸ்லிம் மாணவா்கள் இணைந்து  வருடாந்த இப்தாரும் இராப்போசன  நிகழ்வும் நேற்று(10) பொரளை கிங்சிலி வீதியில் உள்ள மருத்துவ பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு மருத்துவ பீட முஸ்லீம் மஜ்லிஸ் தலைவா் அர்சத் தலைமையில் நடைபெற்றது.
இங்கு  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகையிா், ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகப் பேச்சாளா் விசேட  உரை ஆற்றினாா்கள்.  இந் நிகழ்வில் மருத்துவ பீட விரிவுரையாளா்கள்,  பேராசிரியர்  றிஸ்வி சரீப், பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் பணிப்பாளா்  டொக்டா் எம். ஹனிபா  மற்றும்  ஏனைய இனங்களைச் சாா்ந்த மருத்துவ பீட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இப்தாா் நிகழ்விலும் கலந்து கொண்டாா்கள்.

Related posts

உயிலங்குளம் கமநலசேவைகள் நிலையம் இடிந்து விழும் நிலையில்: விவசாயிகள் விசனம் (விடியோ)

wpengine

வவுனியா,தாண்டிக்குளம் பகுதியில் பதற்ற நிலை

wpengine

மட்டு கடலில் பாம்புகள்! இது சுனாமியின் அடையாளமா?

wpengine