உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொரோனா பெண்! குவைட் நாட்டில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை

குவைத் நாட்டில் சிக்கியுள்ள இலங்கை பெண்ணொவர்,தனது உயிரை காப்பாற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


காணொளி தொலைபேசி அழைப்பின் மூலம் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.


குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வரும் இந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


இந்த பெண் தொழில் புரியும் வீட்டின் உரிமையாளர்கள், பெண்ணுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்யாது தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அந்த பெண் அழுதவாறு கூறியுள்ளார்.


தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் மயக்கம் ஏற்படுவது போல் உணர்வதாகவும் தான் இறக்கும் முன்னர் தன்னை காப்பாற்றுமாறும் தனக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பெண் காணொளியில் தெரிவித்துள்ளார்.

Related posts

எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றது-உதய கம்மன்பில

wpengine

குச்சவெளியில் 3 பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

wpengine

விவசாய அமைச்சருக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் முறைப்பாடு

wpengine