பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்கள் நியமனம்

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரிகள் இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து கடமைகளை பொறுப்பேற்பதற்காக கையொப்பமிட்டுள்ளனர்.


குறித்த பட்டதாரிகள் அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தெரிவித்தார்.


கிண்ணியா பொது சுகாதார பணிமனையின் கீழ் குறித்த பயிலுனர் பட்டதாரிகள் நியமிக்கவுள்ளார்கள்.
இவர்களுக்கான கடமை தொடர்பான விடயங்களை பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.


குறித்த நிகழ்வில் கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி போன்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதில் தமிழ்த் தலைவர்களைவிட அதீத அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்.

wpengine

ஒன்றிணைத்த நாட்டை  பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி மஹிந்த

wpengine

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க நாணயம்,முத்திரை வெளியீட நடவடிக்கை

wpengine