பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்கள் நியமனம்

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரிகள் இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து கடமைகளை பொறுப்பேற்பதற்காக கையொப்பமிட்டுள்ளனர்.


குறித்த பட்டதாரிகள் அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தெரிவித்தார்.


கிண்ணியா பொது சுகாதார பணிமனையின் கீழ் குறித்த பயிலுனர் பட்டதாரிகள் நியமிக்கவுள்ளார்கள்.
இவர்களுக்கான கடமை தொடர்பான விடயங்களை பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.


குறித்த நிகழ்வில் கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி போன்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

Maash

ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது’ -அஷாத் சாலி

wpengine

துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி

wpengine