பிரதான செய்திகள்

கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது

புத்தளம் நகர சபையின் தலைவர்  ​கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தொன்றில் நேற்று (23) மரணமடைந்த நிலையில், அவரது சாரதி உள்ளிட்ட மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள்  மதுபோதையில் இருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் புத்தளம் மற்றும் வனாத்தவில்லு  பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

இரண்டு பட்டனை கழட்டிவிட்ட நடிகை! கவர்ச்சி படம் வெளியானது.

wpengine

வவுனியாவில் மர்மமான முறையில் கொலையான காவல் துறை அதிகாரி

wpengine

மன்னாரில் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தினை

wpengine