அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில் விடுதலை !

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இன்று வியாழக்கிழமை (19) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்று புதன்கிழமை (18) சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றியதால், நீதிமன்ற உத்தரவின் கீழ் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பயங்கரவாத தடுப்பு, விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

wpengine

மன்னார் காற்றாலை! கட்டுப்பாட்டு விலை தொடர்பாக ஆலோசனை

wpengine

மன்னார் மக்களுக்கு வெள்ள அனர்த்த சீனா நிவாரணம் .!

Maash