பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக அ.இ.ம.கா.

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் சிறுபான்மை கட்சியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தற்போது இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும்,குருநாகல் மாநகர சபையின் உறுப்பினருமான மெ.அசாரூதீன் எமது வன்னி நியூஸ் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை பெரும்பான்மை கட்சிகள் 51 வீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் புதிய தவிசாளரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் ஏனைய பெரும்பான்மை கட்சிகளுக்கு ஆட்சியினை தீர்மானிக்கும்,பேரம் பேசும் சக்தியாக இருப்பதாக தெரிவித்தார்.

எமது கட்சி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எமது தலைவர் தெரிவிப்பார் அந்த வேளையில் நாங்கள் வாக்களிப்போம், எனவும் கூறினார்.

பெரும்பான்மை கட்சிகள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும்,கட்சி தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related posts

விமான பயணத்தில் இந்தியாவில் “செல்பிக்கு“ வரயிருக்கும் தடை

wpengine

மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய நடவடிக்கை றிஷாட்

wpengine

வவுனியா ஓமந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

Maash