பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதி கொழும்புக்கு திடீர் இடமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் கடற்படை உப பிரிவின் தளபதியாக செயற்பட்டுவந்த ரியர் அட்மிரல் நீல்
ரோசய்ரோ, கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது கடற்படை தன்னார்வ படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டு வந்த ரியர் அட்மிரல் டிரவ்ஸ் சின்னையா, கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றம் கடற்படையின் நிர்வாக தேவைகளுக்கேற்ப இடம்பெற்றதாக கடற்படை ஊடாக பேச்சாளர், கபிதாத் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Related posts

மின்னிணைப்பை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

இந்திய படகு மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Maash

குன்றும் ,குழியுமான வீதிகள் இன்று காபட் வீதியாக காணப்படுகின்றது.

wpengine