கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் படகில் தவறி விழுந்து உயிரிழப்பு..!

கிளிநொச்சி (Kilinochchi) – இரணைதீவு கடற்பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்துஉயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (16.04.2025) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமாதா நகர் கிராமத்தில் இருந்து இரணைதீவு கடற்பகுதிக்கு கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இளைஞன் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் நேற்று பகல் 10 மணியளவில் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும், பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டு உறவினரிடம் இரவு கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸ் முன்னெடுத்து வருகின்றனர். 

Related posts

சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலையில் இலங்கை பெண்கள்

wpengine

இனவாத நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ -முஜீபுர் றஹ்மான்.

wpengine

கிழக்கு மகாண கல்விப் பணிப்பாளரிடம் தோற்றுப்போன ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine