கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல் இன்று . ..!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்று (17) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேலமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்களின் பங்கேற்போடு, இரு சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நண்பகல் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர் போராட்டம், தையிட்டி விகாரைக்கு எதிராக.!

Maash

மன்னார் வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள்.!

Maash

இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது – இனவாதத்தை தோற்கடிக்க முடியாவிடில் புதிய சட்டம்.

Maash