பிரதான செய்திகள்

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

கிராமிய மட்டத்திலான புத்தாண்டு கொண்டாட்டங்களையும் தடை செய்யுமாறு பதில் காவல்துறை மா அதிபர், சகல காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


கிராமிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளையும் தடை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நகர மட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடாத்த முடியாத காரணத்தினால், கிராமிய மட்டத்தில் அவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்துமே மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியது எனவும் இதனை மக்கள் புரிந்து கொண்டு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Related posts

சிங்கள,புத்தாண்டு சமுர்த்தி,குறைந்த வருமானம் குடும்பங்களுக்கு 5000 ரூபா

wpengine

வவுனியாவில் 150 வீடுகளை ஒப்படைத்த லைக்கா ஞானம்

wpengine

காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் வேலைத்திட்டம் -காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுப்பு

wpengine