பிரதான செய்திகள்

கிண்ணியா தள வைத்தியசாலையினை தரம் உயர்த்த வேண்டும்! இளைஞர்கள் போராட்டம்

கிண்ணியா தள வைத்தியசாலையைத் தரம் உயர்த்தித்தருமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்கள்ப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கிண்ணியாவின் முன்னால் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் இளைஞர்கள்,சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமது கோரிக்கைகான தீர்வு பெற்று தரும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

wpengine

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வின் முடிவுகள்

wpengine

ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியாவில்

wpengine